
கிரிக்கெட்டில் ஃபோர்பீச்சர் என்ற சட்டம் ஒன்று உள்ளது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட போட்டியை விளையாட விருப்பம் இல்லையென்றால் அந்த அணியின் கேப்டன் அந்த போட்டியை ஃபோர்பிட் செய்ய முடியும். அதாவது ஒரு போட்டியின் இன்னிங்ஸை விளையாடாமல் விலக முடியும்.
ஆனால் ஒருநாள் போட்டி, டி 20 போட்டிகளில் இதை செய்தால் அந்த போட்டியில் இருந்து விலகுவதற்கு சமம். அதாவது அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு எதிரணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான முடிவு. கிரிக்கெட் வரலாற்றில் இது அரிதாகவே நிகழ்ந்துள்ளது. சரியான காரணம் இல்லாமல் இந்த முடிவை எடுத்தால் போட்டியை ஏற்பாடு செய்யும் வாரியத்தை அவமதிப்பது போன்று ஆகிவிடும். மேலும் சர்வதேச அரங்கில் அந்த அணியின் நன்மதிப்புக்கும் களங்கம் ஏற்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/HOAGtIm