
பர்மிங்காம்: வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்க அணி. இந்த ஆட்டத்தில் 60 பந்துகளில் அதிரடியாக ஆடி 120 ரன்கள் சேர்த்து அசத்தினார் தென் ஆப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ்.
இங்கிலாந்தில் கடந்த மாதம் தொடங்கிய இந்த தொடர் நேற்று (ஆக.2) நிறைவடைந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளிட்ட அணிகள் இதில் பங்கேற்றன. சர்வதேச கிரிக்கெட்டில் அசத்திய முன்னாள் வீரர்கள் இதில் பங்கேற்று விளையாடினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/0vIx6y3