இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராகப் பேச்சு: போனை எடுத்தாரா தோனி? - மனோஜ் திவாரி கிண்டல்

மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் எம்.எஸ்.தோனி, சென்னை ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனியை இந்திய அணியின் நம்பிக்கை அறிவுரையாளராக நியமிக்க அழைப்பு விடுத்ததாக எழுந்த செய்திகளை அடுத்து முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடும் கிண்டலடித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் தோனியை நம்பிக்கை ஆலோசகராக நியமிக்க பிசிசிஐ அழைப்பு விடுத்ததாக செய்திகள் உலா வந்தவண்ணம் உள்ளன. இது குறித்து முன்னாள் வீரரும் மேற்கு வங்க எம்.எல்.ஏவுமான மனோஜ் திவாரி கிண்டலாக, “ஓஹோ! போனை எடுத்தாரா தோனி? போனில் அவரைப் பிடிப்பது மிகக்கடினம்” என்று கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ytQfXl2