ரமலான் நோன்பு சமயத்தில் எனர்ஜி டிரிங் பருகிய விவகாரம்: இஸ்லாத்தில் அனுமதி உள்ளதாக ஷமி கருத்து

பெங்களூரு: ரமலான் நோன்பு மாதத்தின்போது உற்சாக பானம் பருகியது சர்ச்சையான நிலையில், அது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் முகமது ஷமி இடம்பெற்றிருந்தார். தற்போது துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக அவர் விளையாடி வருகிறது. இந்தச் சூழலில் ரமலான் நோன்பின்போது உற்சாக பானம் பருகியது குறித்து ஷமி பேசியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Mi0yDkz