
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஸ்பான்சர் பொறுப்பில் இருந்து ட்ரீம்11 நிறுவனம் விலகியுள்ளது. இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) ட்ரீம்11 தெரிவித்துள்ளது. இந்த சூழலில் புதிய ஸ்பான்சருக்கான தேடலை அணி நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த வாரம் மக்களவையில் ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-னை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார். அந்த மசோதா தான் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஸ்பான்சராக உள்ள ட்ரீம்11 விலகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/lXYH74z