
லார்ட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ஜோ ரூட் சதம் விளாசினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 18, பென் டக்கெட் 23, ஆலி போப் 44. ஹாரி புரூக் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜோரூட் 99, பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/n5uN17f