
ரோஹித் சர்மா தன் 38-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தது குறித்து நிறைய உத்தேசக் காரணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. இது வழக்கம்தான். ஏனெனில், ஓய்வு பெறுபவர் உண்மையான காரணங்களைத் தெரிவிக்காதபோது கலாய்ப்புகள் ஆதிக்கம் செலுத்தும் என்பது பொதுவானதுதானே!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் ரோஹித் வருவதற்கு முன் பும்ரா கேப்டன்சியில் பெர்த் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி பெரிய தோல்வியைப் பரிசாக அளிக்க, ரோஹித் வந்த பிறகோ பேட்டிங்க்கிலும் சொதப்பி கேப்டன்சியிலும் ஒன்றுமேயறியாத சிறுபிள்ளை போல் செய்து படுதோல்விக்குக் காரணமாக அமைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/NwLdnAl