நியூஸிலாந்திடம் பாகிஸ்தான் செம உதை - 22 ரன்களில் 7 விக்கெட்டுகள் இழப்பு!

நேப்பியரில் இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் நியூஸிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்று முன்னிலைப் பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்தார் பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான். மார்க் சாப்மனின் அதிரடி 132 ரன்கள், டேரில் மிட்செலின் 76 ரன்கள், முகமது அப்பாஸின் 26 பந்து 52 ரன்களுடன் நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 249 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 22 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 44.1 ஓவரில் 271 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ksGZK9a