சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கன் அணி ஆலோசகராக யூனிஸ் கான் நியமனம்!

காபூல்: எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது. தலா 4 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு குரூப் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. குரூப் ‘ஏ’-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. குரூப் ‘பி’-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/gz7uw5f