சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது. இந்நிலையில், நான் அங்கு இருந்திருந்தால் அஸ்வின் இப்படி விடைபெற்று செல்ல அனுமதித்திருக்கக் மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
“இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பரவலாக ஏமாற்றத்தை தந்துள்ளது. அவரது முகத்தில் அந்த வேதனையை நான் பார்த்தேன். அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது வருத்தம் தான். அவருக்கு சொந்த மண்ணில் திருப்திகரமான ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/LCUo6BT