
கராச்சி: இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மாட்டோம் என்றும், இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்தவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வலியுறுத்தி வருகிறது. எனவே, ஹைபிரிட் மாடல் வகையில் போட்டி நடத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதாவது இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நடுநிலையான மைதானங்களில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, போட்டியின் அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/64l02XT