சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு!

பிரிஸ்பன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அஸ்வின் இடம்பிடித்தார். இந்த பயணத்தில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் அவர் விளையாடி இருந்தார். இந்த நிலையில் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/7oq5ydu