ஸ்ரேயாஸ் ஐயர் கடைசியாக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடியது உலகக் கோப்பை 2023. டி20 கிரிக்கெட்டிலும் அவர் இந்தியாவுக்காக ஆடி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனாலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரூ.26.75 கோடி விலை கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் வாங்கியிருக்கிறது என்றால் ஐபிஎல் லாஜிக் என்பதே ஒரு தனி ரகம் என்றுதான் பொருளா அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் உண்மையில் அவ்வளவு மதிப்பு மிக்க வீரரா என்ற கேள்விகள் பலருக்கும் எழுவது நியாயமே.
சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஆகியோரை விடவும் அதிக விலை கொடுக்கப்பட வேண்டியவரா என்பதும் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. காரணத்தை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/fv7d1Rj