புனே ஸ்பின் பிட்சில் இந்திய அணி மோசமாக விளையாடியதே தோல்விக்கு காரணம்: இயன் சாப்பல்

புனே, மும்பை ஸ்பின் பிட்ச்களில் இந்திய அணி படுதோல்வி அடைந்து நியூஸிலாந்து அணி முதல் முறையாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவில் இந்திய அணியை வரலாறு காணாத விதத்தில் ஒயிட் வாஷ் தோல்வியை பரிசாக அளித்துள்ளது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சில் ஆடத்தெரியாமல் 46 ரன்களுக்குச் சுருண்டு ஹென்றி, ரூர்க் இருவரிடமும் மடிந்தது. டெஸ்ட் தோல்வியில் முடிந்தது. கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வது போல், ‘அட விடுப்பா அவங்களாவது வேற ஸ்டேட், வேற கண்ட்ரி’. ஆனால் புனே, மும்பை ரேங்க் டர்னர் பிட்ச்களில் இந்திய அணி தோல்வி கண்டது மிக மிக வேதனை தரக்கூடியது. இப்போது என்ன நிலைமைக்கு இந்திய அணி வந்து விட்டது வேகப்பந்து வீச்சும் ஆடத்தெரியாது, ஸ்பின் பந்து வீச்சையும் ஆடத்தெரியாது என்ற நிலைக்கு ‘முன்னேறியுள்ளது’.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/5LI8oBC