பெர்த் டெஸ்ட் போட்டி கிரீன் டாப் பிட்சில் தொடங்கி உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் என்று தடுமாற்றமான தொடக்கம் கண்டுள்ளது. இதில் கே.எல்.ராகுல் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது நடுவர் தீர்ப்பு என்னும் கோடரி அவர் மேல் விழுந்து வருத்தத்துடனும் அதிருப்தியுடனும் அவர் வெளியேற நேரிட்டது.
ஸ்டார்க்கின் ஆஃப் ஸ்டம்ப் பந்து ஒன்று அவரை குறுக்காகக் கடக்க பந்து மட்டையைக் கடக்கும் போது ராகுலின் மட்டை கால்காப்பில் பட்டது, இரண்டு சவுண்ட் கேட்டதுபோல் தெரிய ஆஸ்திரேலிய வீரர்கள் முறையீடு எழுப்பினர், களநடுவர் அவுட் கொடுக்கவில்லை. கமின்ஸ் மூன்றாவது நடுவர் தீர்ப்புக்கு முறையிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/UCSPcus