சத்தீஸ்கர் அணி 500 ரன் குவிப்பு

கோயம்புத்தூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டம் கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சத்தீஸ்கர் அணி, முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று 2-ம் நாள் ஆட்டத்தை அனுஜ் திவாரி 68, சஞ்சீத் தேசாய் 52 ரன்களுடன் தொடங்கினர். அனுஜ் திவாரி 84, சஞ்சீத் தேசாய் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/F60KYGW