ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 562 ரன்கள் குவித்தது. ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 92 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்தது.
முஸ்பிகுர் ரஹிம்55 ரன்களும், லிட்டன் தாஸ் 52 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடர்ந்து விளையாடியது. லிட்டன்தாஸ் 56 ரன்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்தில் ஆட்டமிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/N2SF0Vt