துலீப் டிராபி அணிகளும், வீரர்கள் தேர்வும் - பிராந்தியப் பன்முகத்தன்மை சீர்குலைவுக்கு அடித்தளமா?

துலீப் டிராபி என்பது தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம் என்று 4 மண்டலங்களுக்கு இடையேயான போட்டித் தொடராக இருந்தபோது பிராந்தியப் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட்டது. இப்போது 60 வீரர்களை ஷார்ட் லிஸ்ட் செய்து 4 அணிகளாக ரேண்டமாகப் பிரிப்பதன் மூலம் மண்டலங்களுக்கு இடையிலான ஓர்மையும் பிராந்தியப் பன்முகத்தன்மையும் குலைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5-ம் தேதி பெங்களூருவில் துலீப் டிராபி தொடங்குகிறது. இதில் ஏ,பி,சி,டி என 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதலில் வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம் மோதும் போட்டித் தொடராக இருந்த போது ஒவ்வொருவருக்கும் ஒரு மண்டல, பிராந்திய அடையாளம் இருந்தது. அந்த பிராந்திய அடையாளத்தின் மூலம் போட்டித்தன்மையும் அதிகமாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ZGzT4Mx