ரொனால்டோவின் மோசமான ‘மிஸ்’ - காலிறுதியில் பிரான்ஸிடம் போர்ச்சுகல் பணிந்தது எப்படி? | Euro Cup

யூரோ கோப்பை 2024 காலிறுதிப் போட்டியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடைபெற்ற போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்ஸ் அணி, போர்ச்சுகல் அணியை 5-3 என்று வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. தன் கடைசி யூரோ கோப்பையை 39வது வயதில் விளையாடிய நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கும், போர்ச்சுகலுக்கும் இது ஒர் பெரிய அடியாகிப் போனது.

இத்தனைக்கும் பிரான்சின் ஸ்ட்ரைக்கரும் கேப்டனுமான உத்வேக கைலியன் மபாப்பே காயம் காரணமாக கூடுதல் நேரத்தின் போது விலகினார். பெனால்டி ஷூட் அவுட்டில் 5க்கு 5 கோல்களை பிரான்ஸ் அடிக்க, 3 கோல்களை மட்டுமே போர்ச்சுகல் அடிக்க முடிந்தது. 2004 முதலான ரொனால்டோவின் யூரோ பயணம் சோகத்தில் முடிந்தது. போர்ச்சுகல் வீரர் ஜோ பெலிக்ஸின் பெனால்டி கிக் போஸ்ட்டில் அடித்து கோல் தவறிப்போக பிரான்சின் ஹெர்னாண்டஸ் வெற்றி கோலை பிரான்சுக்காக அடித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/aLs89UZ