
நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கையை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இந்த போட்டியல் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் நோர்க்கியா அபாரமாக பந்து வீசி இருந்தார்.
நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.1 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. குசல் மென்டிஸ் எடுத்த 19 ரன்கள் மட்டுமே அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சார்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக அமைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/91MFgow