‘குருவி தலையில் பனங்காய்’ பிட்ச் - ஆப்கன் இதயத்தை நொறுக்கிய ஐசிசி | T20 WC 2024

தருவ்பாவில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு கிரீன் டாப் பிட்ச் அனுபவமற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு அப்படிப்பட்ட ஒரு பவுலிங் பிட்சைப்போட்டு ஐசிசி அந்த அணியைக் காலி செய்துள்ளது என்றுதான் கூற வேண்டியுள்ளது. மொத்தப் போட்டியுமே 20 ஒவர்கள்தான் தாங்கியது.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் போன்ற டாப் அணிகள் தகுதி பெறாமல் போன நிலையில் ஆப்கானிஸ்தான் அணி நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளை கடினமாக ஆடி வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளனர். பெரும்பாலும் இந்தியப் பிட்ச்களில் அதுவும் இந்தியாவில் அவர்கள் ஆடும் பிட்ச்களின் தன்மை நம் எல்லோருக்கும் தெரிந்ததே, இப்படிப்பட்ட அணிக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் ரக வேகப்பந்து வீச்சு சாதக கிரீன் டாப் பிட்சைப் போடலாமா என்பதுதான் நம் தார்மீகக் கேள்வி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/HEFb0le