பெங்களூரு: “நான் தன்னம்பிக்கை இல்லாமல் போராடியபோது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக்" என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் ஓய்வு குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ஆர்சிபி நிர்வாகம் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்றில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். மற்றொன்றில், ஆர்சிபி வீரர்கள் தினேஷ் கார்த்திக் குறித்து புகழ்ந்து பேசி வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பாக விராட் கோலி பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/jo14i5b