சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் தனது ஓய்வு குறித்த முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. இந்தச் சூழலில் அவரது ஃப்யூச்சரை அவரே தீர்மானித்து தங்களிடம் சொல்வார் என சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசன் தோனி பங்கேற்று விளையாடும் கடைசி சீசனாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. ஏனெனில், அடுத்த சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அணிகள் இத்தனை வீரர்களை தான் தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/aOMLKvT