‘ஃபீனிக்ஸ்’ ஆர்சிபி - எலிமினேஷனில் இருந்து ‘ப்ளே ஆஃப்’ பாதைக்கு திரும்பியது எப்படி?

பெங்களூரு: கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பிளே ஆஃப் வாய்ப்புக்கான ரேஸில் இருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ‘ஈ சாலா கப் நம்தே’ என அந்த அணியின் ரசிகர்கள் எப்போதும் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது ஆர்சிபி அணியின் செயல்பாடு. அந்த அணி ஃபீனிக்ஸ் போல மீண்டு ‘ப்ளே ஆஃப்’ வெற்றிப் பாதைக்கு திரும்பியது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் எட்டு போட்டிகளில், ஏழு தோல்வியை தழுவி இருந்தது ஆர்சிபி. கிட்டத்தட்ட முதல் சுற்றோடு ஆர்சிபி நடையை கட்டும் என்ற நிலை. அதன் காரணமாக அணியின் ஆடும் லெவன் தேர்வு, ஏலம் சார்ந்த செயல்பாடு, அணியின் பலம், பேட்டிங், பவுலிங் குறித்தெல்லாம் விமர்சன கணைகள் ஏவப்பட்டது. அனைத்து தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Ix4Fa7m