
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 29-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் எடுத்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே என இருவரும் இதில் அரை சதம் பதிவு செய்தனர். கடைசி ஓவரில் களம் கண்ட தோனி, 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.
மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரச்சின் ரவீந்திரா மற்றும் ரஹானே இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். 8 பந்துகளை எதிர்கொண்ட ரஹானே, 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ருதுராஜ் களத்துக்கு வந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்தது சிஎஸ்கே.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/vREP7UV