
மும்பை: வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூருவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியின் போது, அந்த அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரை பரஸ்பரம் ஓவருக்கொருவர் கட்டி அணைத்தது குறித்து ஆர்சிபி வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டார் கம்பீர். அப்போது லக்னோவில் நடைபெற்ற போட்டியில் கோலி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கம்பீர். அது கடந்த சீசனில் பெரிய அளவில் கவனம் பெற்றது. அவருடன் எல்எஸ்ஜி வீரர் நவீன்-உல்-ஹக்கும் இணைந்து கொண்டார். இந்தச் சூழலில் நடப்பு சீசனில் கோலியும், கம்பீரும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும்போது என்ன நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு சர்ப்ரைஸ் தந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/XzTLpof