பந்து வீச்சில் பலம் இல்லாததால் பேட்டிங்கில் அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்: ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸிஸ்

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி.197 ரன்கள் இலக்கை துரத்தியமும்பை இந்தியன்ஸ் 27 பந்துகளை மீதம் வைத்து 15.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில், 52 ரன்களையும் இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களையும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர். இவர்களுக்கு உறுதுணையாக விளையாடிய ரோஹித்சர்மா 38 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்களும், திலக் வர்மா 10 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்தனர். மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ளஅந்த அணி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது 6-வது ஆட்டத்தில் 5-வது தோல்வியை சந்தித்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/QZiIlm4