ஷுப்மன் கில் மனநிலை கோலிக்கு ஏன் வேண்டும்?

ஐபிஎல் கிரிக்கெட்டில் சேஸிங்கில் ஒரு அணி சிறந்து விளங்குகிறது என்றால் அது குஜராத் டைட்டன்ஸ் என்றே கூற வேண்டும். அதுவும் நேற்று (ஏப்.10) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக்கின் அதிரடி ஆட்டத்தில் 196 ரன்களைக் குவித்தது. இந்த லோ பவுன்ஸ் பிட்சில் இது அதிகமான ஸ்கோர். `180 ரன்களே வெற்றிபெறுவதற்கான ரன்கள்தான்.

ராஜஸ்தான் அந்த ஒரு பவுலிங்கை வைத்துக் கொண்டு வென்றிருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை. காரணம் ஷுப்மன் கில்லின் மாஸ்டர் மைண்ட் தான். இவரது இந்த மனோநிலையில்தான் ஜாம்பவான் கோலியும் ஆட வேண்டும். ஆனால் கோலிக்கு வேறு அஜண்டா உள்ளது. ‘டேய் நான் இன்னும் டி20 தாதா’ என்று அவர் யாருக்கோ மெசேஜ் கொடுத்துக் கொண்டிருக்கிறாரே தவிர, அணி தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது பற்றி அவர் கவலைப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SrvOfx7