
தரம்சாலா டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன் 2வது இன்னிங்சில் மட்டையாளர்களுக்குச் சாதகமானப் பிட்சில் 50 ஓவர்கள் கூட தாங்காமல் 195 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்து தொடரை 1-4 என்று இழந்தமை அந்த அணியுடன் இனி 5 டெஸ்ட் போட்டிகள் தாங்குமா என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம். இங்கிலாந்து தோல்வியடையும் முன்னரே இதைக் குறிப்பிட்டோம். இந்நிலையில் இங்கிலாந்து வீரர்களின் வாய்க்கொழுப்புக்குச் சான்றாக தரம்சாலாவில் 3ம் நாள் ஆட்டத்தில் ஷுப்மன் கில் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இடையே வாக்குவாதம் ஒன்று நடந்தது.
இந்திய அணியினர் ஒரு காலத்தில் வாய் பேசாமல் வாளாவிருந்துள்ளனர், ஆனால் கங்குலி, கும்ப்ளே, விராட் கோலி இப்போது ரோஹித் சர்மா காலக்கட்டங்களில் எதிரணியினரின் வாய்க்கொழுப்புக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ஜெய்ஸ்வால் அதிரடி இரட்டைச் சதத்தையும் கில் அதிரடி சதத்தையும் எடுக்க சர்பராஸ் கான் இங்கிலாந்து பவுலர்களுடன் வீடியோ கேம் போல் விளையாட பொறுக்கமாட்டாமல் பென் டக்கெட் ‘தங்கள் பாணியை எதிரணி வீரர்கள் கடைப்பிடிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறி தூண்டி விட்டார். உடனே அவருக்கு அனைவரும் பதிலடி கொடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/B6dgjr8