ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | அரை இறுதியில் மும்பையுடன் தமிழக அணி இன்று மோதல்

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின்அரை இறுதி ஆட்டத்தில் மும்பை–தமிழகம் அணிகள் இன்று மோதுகின்றன.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி சுற்று இன்று தொடங்குகிறது. இதில் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் 41 முறை சாம்பியனான மும்பையுடன் தமிழகஅணி பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை அணியில் இந்திய பேட்ஸ்மேனான ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்குகிறார். இந்தத் தொடரில் தமிழக அணி சுழற்பந்து வீச்சில் வலுவாக செயல்பட்டு வருகிறது. இதைசமாளிக்கவே ஸ்ரேயஸ் ஐயர்அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/caFjyIp