
குஜராத் டைட்டன்ஸ் அணி 2022-ம் ஆண்டு அறிமுகமான நிலையில் அந்த சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று அனைவரையும் வியக்க வைத்தது. தொடர்ந்து அடுத்த சீசனில் இறுதிப் போட்டி வரை சென்றது. எனினும் சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த இரு சீசனினும் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், தனது ஆல்ரவுண்ட் திறனாலும் அணிக்கு பெரிய பலமாக இருந்தார்.
ஆனால் இம்முறை ஹர்திக் பாண்டியா டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இடம் பெயர்ந்துவிட்டார். இதனால் குஜராத் அணியை இளம் அதிரடி பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் வழிநடத்த உள்ளார். இந்த சீசன் ஷுப்மன் கில், தன்னை ஒரு நம்பகமான கேப்டனாக நிரூபிக்க சிறந்த வாய்ப்பை வழங்கக்கூடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/SNeTYwo