
பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆந்த்ரே ரஸ்ஸல், ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு ஆகியோரது அதிரடியால் 37 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 8.4 ஓவர்களில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஜான்சன் சார்லஸ் 4, கைல் மேயர்ஸ் 11, நிக்கோலஸ் பூரன் 1, ராஸ்டன் சேஸ் 37, கேப்டன் ரோவ்மன் பவல் 21 ரன்களில் நடையை கட்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/XWQ1bkw