பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன்: சொந்த மண்ணில் பட்டம் வெல்ல ஆயத்தமாகும் சென்னை பிளிட்ஸ்

சென்னை: பிரைம் வாலிபால் லீக்கின் 3-வது சீசன்போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (15-ம் தேதி) தொடங்குகிறது. வரும் மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ் ஆகியஅணிகளுடன் டெல்லி டூபான்ஸ் அறிமுகஅணியாக களமிறங்குகிறது.

முதல் இரு சீசன்களிலும் லீக் சுற்றை கடக்காத சென்னை பிளிட்ஸ் அணியானது இம்முறை சொந்த மண்ணில் பட்டம் வெல்லும் முனைப்புடன் உள்ளது.பயிற்சியாளர் தட்சிணாமூர்த்தி, கேப்டன்அகின் ஆகியோரது முன்னிலையில் கடந்த இருவாரங்களாக சென்னை பிளிட்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இம்முறை அணியில் சர்வதேச போட்டிகள் மற்றும் உலகளாவிய லீக்கில் விளையாடி உள்ள வீரர்களுடன் இளம்வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மிடில்பிளாக்கரான அகின் ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, தெற்காசிய விளையாட்டு, ஒலிம்பிக் தகுதிசுற்று ஆகியவற்றில் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/vqoHSwK