
மும்பை: “என்னைப் பொறுத்தவரை என்னுடைய திறமையின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். என் அப்பாவிடம் சொன்னால் கூட அவர் மற்றவர்களை தொடர்பு கொண்டு எனக்காக பேசுவார் என தோன்றவில்லை” என இயக்குநர் விது வினோத் சோப்ராவின் மகன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியான ‘12த் பெயில்’ படத்தின் இயக்குநர் விது வினோத் சோப்ரா. இந்தப் படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டபட்டு ஐஎம்டிபி தரவரிசையில் அதிக ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. இவரது மகன் அக்னி தேவ் சோப்ரா. இவர், தற்போது நடைபெற்று வரும் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Jjom5Eh