
ஜகார்த்தா: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் நான்சி 252.8 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான இளவேனில் வாலறிவன் 252.7 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பாட்டீல் 228.7 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ZFmQvVu