நேப்பியர் போட்டியில் நியூஸிலாந்தை முதல் முறையாக வீழ்த்தி வங்கதேச அணி சாதனை

நேப்பியர்: வங்கதேச அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூஸிலாந்து அணி. எளிதான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியானது 31.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக வில் யங் 43 பந்துகளில், 3பவுண்டரிகளுடன் 26 ரன்களும், கேப்டன் டாம் லேதம் 21, ஜோஷ் கிளார்க்சன் 16, ஆதித்யா அசோக் 10 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. வங்கதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன் ஷகிப், சவுமியா சர்க்கார் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/rk9P1I8