தேசிய கராத்தேவில் வெண்கலம்: வறுமையிலும் சாதித்த திருப்பூர் மாணவி சஸ்மிதா!

திருப்பூர்: திருப்பூர் புதுராம கிருஷ்ணா புரம் மாநகராட்சி அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி சஸ்மிதா. இவர் திருப்பூர் அணைக் காட்டில் தந்தை செந்தில் குமார், தாய் மஞ்சுளா தேவியுடன் வசித்து வருகிறார்.

தந்தை பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாகவும், தாய் வேஸ்ட் குடோனில் கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வருகின்றனர். நாள்தோறும் இவர்கள் வேலைக்குச் சென்றால் மட்டுமே ஜீவனம் நடத்தக்கூடிய குடும்ப சூழல். இந்நிலையிலும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று திரும்பியுள்ளார் சஸ்மிதா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/mgUeMb4