
புனே: ஏஞ்சலோ மேத்யூஸு செய்யப்பட்டதை போல் தானும் டைம்டு அவுட் செய்யப்படாமல் இருக்க, இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியில்லாததால் தான் இறங்கிய பிறகும் முதல் பந்தை சந்திக்க கால தாமதம் ஆனதன் காரணமாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார். வங்கதேச முறையீட்டினால் வரலாற்றில் முதல்முறையாக டைம்டு அவுட் கொடுக்கப்பட்டது. இது தொடர்பான சர்ச்சைதான் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளாகி உள்ளது. 146 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. வங்கதேசத்தின் செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/9nj6CRY