ஏடிபி பைனல்ஸ் தொடரில் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

துரின்: ஏடிபி பைனல்ஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொண்ட ஏடிபிபைனல்ஸ் தொடர் இத்தாலியில் உள்ள துரின்நகரில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னருடன் மோதினார். ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/zkPoXlT