ஐசிசி-யின் சிறந்த அணியில் இந்திய வீரர்கள் 6 பேருக்கு இடம்

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் இந்த தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகிய 6 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தொடக்க வீரராக தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், உலகக் கோப்பை தொடரில் 594ரன்கள் குவித்திருந்தார். மற்றொருதொடக்க வீரராகவும், கேப்டனாகவும், ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர், உலகக் கோப்பை தொடரில் 11 ஆட்டங்களில் 54.27 சராசரியுடன் 597 ரன்கள் குவித்திருந்தார். இதில் ஒரு சதம், 3 அரை சதங்கள் அடங்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/YOT0BrR