ODI WC 2023 | காசா மக்களுக்கு சதத்தை அர்ப்பணித்த பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்!

ஹைதராபாத்: இலங்கைக்கு எதிரான வெற்றியையும், சதத்தையும் காசா மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான்.

நடப்பு உலகக் கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில் இலங்கையை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த வெற்றியை பெற முகமது ரிஸ்வானே காரணம். இப்போட்டியில் முகமது ரிஸ்வான் பொறுப்புடன் விளையாடி, 121 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனிடையே, இலங்கைக்கு எதிரான சதத்தை 'காசாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு' அர்ப்பணிப்பதாக ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/PEyxuDq