
சென்னை: உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓப்பனரை டக் அவுட்டாக்கியதன் மூலம் பும்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். அதேபோல இந்த கேட்சை பிடித்ததன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற பெருமையை கோலியும் பெற்றுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் 2வது ஓவரில் பும்ரா வீசிய பந்து மிட்செல் மார்ஷ் பேட்டில் இன்சைடு எட்ஜாகி கோலியின் கைக்குள் ஐக்கியமானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/umkhV9x