
அகமதாபாத்: "அகமதாபாத் மைதானத்தில் இதுவரை நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதில்லை" எனத் தெரிவித்துள்ளார் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 14-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிகவும் எதிர்ப்பார்ப்புக்குரிய ஆட்டமாக இது அமைந்துள்ளது. அமிதாப் பச்சன், ரஜினி போன்ற சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆட்டத்தை நேரில் பார்க்க இருக்கின்றனர். இதனால் 11 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 132,000 ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதற்காக அகமதாபாத் நகரில் இரு அணிகளும் முகாமிட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/PwdQogY