ODI WC 2023 | “அகமதாபாத்தில் இந்தியாவை வீழ்த்தும் திறமை பாகிஸ்தானிடம் உள்ளது” - வாசிம் அக்ரம்

அகமதாபாத்: 1992-ல் முதன் முதலாக உலகக் கோப்பையில் சந்தித்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஆடிய 7 உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இந்திய அணிதான் பந்தாடியுள்ளது. ஆனால் பாபர் அஸம் தலைமையிலான அணி இந்த முறை அகமதாபாத்தில் இந்திய அணியை வீழ்த்தும் என்று முன்னாள் சுல்தான் ஆஃப் ஸ்விங் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் சனிக்கிழமையன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது.

நேற்று இலங்கையின் 345 ரன்கள் வெற்றி இலக்கை அனாயசமாக பாகிஸ்தான் விரட்டியதால் பாகிஸ்தான் அணி முகாமில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் ததும்புகிறது. வெற்றிக்கு மத்தியில் பாகிஸ்தான் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக பீல்டிங் படுமோசம். அன்று விராட் கோலிக்கு மிட்செல் மார்ஷ் கேட்ச் விட்டு என்ன ஆனது என்பதைப் பார்த்தோம். அதேபோல் நேற்று இமாம் உல் ஹக், குசல் மெண்டிஸுக்கு கேட்சை விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டதையும் பார்த்தோம். நிலைமை இப்படி இருக்கையில், போட்டிக்கு முன்னதாகவே உதார் விடும் பாகிஸ்தான் பலவீனங்களை முதலில் சரி செய்ய வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/0nlXaqW