
சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 199 ரன்களை சேர்த்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்ய, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் 2வது ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் மார்ஷ் அவுட்டாக தடுமாற்றத்துடன் இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. ஸ்டீவ் ஸ்மித், வார்னருடன் கைக்கோக்க ஆட்டம் சூடிபிடித்து. 16 ஓவர் வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் பாதுகாத்த இந்த இணையை குல்தீப் யாதவ் பிரிக்க, வார்னர் 41 ரன்களில் அவுட்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/XtLCMlS