
ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. நேபாள அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
203 ரன்கள் இலக்கை துரத்திய நேபாள அணியில் குஷல் புர்டெல் 28 ரன்களும், குஷல் மல்லா 29 ரன்களும், திபேந்திர சிங் 32 ரன்களும், சந்தீப் ஜோரா 29 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இந்திய அணி தரப்பில் அவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். காலிறுதி ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கிய நிலையில் முதல் காலிறுதியில் விளையாடிய இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/l7cD4tL