
ஹைதராபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் நியூஸிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் ஒரு பந்தில் 13 ரன்கள் எடுத்துள்ளார். நியூஸிலாந்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் சாத்தியமற்ற இந்த சாதனை தற்செயலாக படைக்கப்பட்டது.
இன்னிங்ஸின் கடைசி ஓவரை நெதர்லாந்தின் பாஸ் டி லீட் வீசினார். கடைசி பந்தை அவர் புல் டாஸ் பந்தாக வீச, சான்ட்னர் அதை சிக்ஸர் அடித்தார். ஆனால், கள நடுவர் அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்க ப்ரீ ஹிட் கிடைத்தது. இந்தப் பந்தையும் பாஸ் டி லீட் லோ புல் டாஸாக வீச அதனையும் சிக்ஸர் அடித்தார். இப்படியாக இரண்டு சிக்ஸர்கள் மற்றும் நோ-பால் மூலம், ஒரே பந்தில் 13 ரன்கள் எடுக்கப்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் நிகழ்த்தப்படாத சாதனை இது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/L1mwuHs