
மும்பை: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட் விலை ரூ.57 லட்சம் என ஆன்லைன் விற்பனையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்களை ஐசிசி-யின் முதன்மை விற்பனை தளங்கள் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதியும் செப்டம்பர் 3-ம் தேதியும் விநியோகித்தன. ஒரு மணி நேரத்துக்குள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/5kbxG1d