இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெயிக்வாட் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் ஷுப்மன் கில் உடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/1iYqNWR