டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை இழந்த அடுத்த தலைமுறை வீரர்கள்!

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஃப்ரான்சைஸ் டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் ‘தி ஹண்ட்ரட்’ எனும் டி20 கிரிக்கெட் மோகத்தால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் குறைந்து வருவதாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் டி20 கிரிக்கெட்டைத்தான் விரும்புகின்றனர். அதிக பணம் கிடைக்கும் லீக் தொடர்களில் விளையாடவே விரும்புகின்றனர். இதன் சமீபத்திய உதாரணம் இலங்கை ஸ்பின்னரும், ஆர்சிபி வீரருமான வனிந்து ஹசரங்கா. கடந்த ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று ரிட்டையர்டு ஆகிவிட்டதைப் பார்த்தோம்.

இதற்கு முன்பாக நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட்டும் இதே முடிவை எடுத்தார். முன்னதாக, இதற்கெல்லாம் மூலகர்த்தாவாக இலங்கையின் லஷித் மலிங்கா டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று சிறு வயதிலேயே முடிவு எடுத்து, செயல்பட்டார். மேற்கு இந்தியத் தீவுகளின் சில பல வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே தூரம் ஓடி விடுவதைத்தான் பார்க்கிறோம். 26 வயதில் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட் வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். மலிங்கா, போல்ட் ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளார்கள் என்றால் தனியார் கிரிக்கெட் செலுத்தும் ஆதிக்கத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/DJnxGTc